‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சித்ராவிற்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்திகள் வெளியானதை கேட்ட அவரது ரசிகர்கள் ஷாக்கில் உள்ளனர்.

ரசிகர்களை கவர்ந்த சித்து

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் செல்ல மருமகளாக இருப்பவர் சித்ரா. முல்லை என்ற பெயரில் நடித்து அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டவர். ‘சட்டம் சொல்வது என்ன’ என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமான சித்ரா, பின்னர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதுடன், சீரியல்களிலும் நடித்தார். ‘சரவணன் மீனாட்சி’ சீசன் 2, வேலுநாச்சி போன்ற சீரியல்கள் மிகவும் பிரபலமான அவர், தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை ஆக நடித்து அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டு வருகிறார். எப்பொழுதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சித்ரா, அன்றாடம் பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். புடவையில் எந்த அளவிற்கு மங்களகரமாக இருக்கின்றாரோ, அதேபோல் மாடர்ன் உடைகளிலும் கலக்குவார். இவர் கட்டியிருக்கும் சேலையை பார்ப்பதற்காகவே பல ரசிகர்கள் உள்ளனர். ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் கூட்டு குடும்பத்தை மையமாக வைத்த கதை என்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் இளைஞர்களும் இந்த சீரியலுக்கு அடிமை என்றே சொல்லலாம்.

நிச்சயதார்த்தம்?

சித்ராவிடம் ரசிகர்கள் திருமணத்தைப் பற்றி பேசினால் அதை கேலியாகவும், கிண்டலாகவும் எடுத்து ஜாலியான பதில்களைச் சொல்லி தட்டிக்கழித்து விடுவார். இந்த நிலையில், சமீபத்தில் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. அடிக்கடி மணப்பெண் கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை சித்ரா வெளியிட்டு வருவதால், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களையும் பார்த்த ரசிகர்கள் போட்டோ ஷூட்டுக்காக அவர் அலங்காரம் செய்து இருக்கலாம் என்று நினைத்தனர். ஆனால் உண்மையிலேயே சித்ராவிற்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சித்ராவின் வருங்கால கணவரின் பெயர் ஹேமந்த் என்றும் அவர் ஒரு தொழிலதிபர் என்றும் கூறப்படுகிறது. இதனை அறிந்த இளைஞர்களும், ரசிகர்களும் ஷாக் ஆகினர். முரட்டு சிங்கள்ஸ் எல்லாம் அதிர்ச்சியில் உள்ளனர். இருப்பினும் மனதை தேற்றிக்கொண்டு சித்ராவுக்கு அவர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here