சரவணன் மீனாட்சி புகழ் ‘மைனா’ நந்தினிக்கு வளைகாப்பு நடந்துள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

சின்னத்திரை புகழ்

வெள்ளித்திரை நடிகர்கள் எந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடிக்கிறார்களோ, அதே அளவிற்கு சின்னத்திரை நடிகர், நடிகைகளும் மக்களுக்கு நெருக்கமாகவும், பரிச்சயமாகவும் மாறிவிட்டனர். அதற்கு சமூக வலைத்தளமும் ஒரு முக்கிய காரணம். அவர்கள் வீட்டில் நடக்கும் நல்ல விஷயமாக இருந்தாலும் சரி, செல்ஃபி புகைப்படங்களாக இருந்தாலும் சரி சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை நந்தினி. இந்த சீரியலில் நடித்ததால் இவருக்கு நல்ல பெயரும், புகழும் கிடைத்தது. அதனால் பல ரசிகர்களும் இவரை மைனா நந்தினி என்று செல்லமாக அழைக்கின்றனர். அதன்பிறகு பல சீரியல்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

2வது திருமணம்

சீரியல்கள் மட்டுமல்லாமல் படங்களிலும் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. வம்சம், ராஜா ராணி போன்ற பல படங்களில் நடித்துள்ளார் மைனா. பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தில் இவர் நடித்திருந்தார். கார்த்திகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்த பிறகு, கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். பிறகு இவரது கணவரான கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சில ஆண்டுகள் தொலைக்காட்சி பக்கம் தலை காட்டாமல் இருந்த நந்தினி, கடந்த நவம்பர் மாதம் சீரியல் நடிகரான யோகேஸ்வரனை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.

வளைகாப்பு

தற்போது கர்ப்பமாக இருக்கும் நந்தினிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. வளைகாப்பு நடந்து முடிந்த கையுடன், தன் கணவருடன் இருக்கும் புகைப்படங்களையும், செல்ஃபி புகைப்படங்களையும், சமூக வலைத்தளங்களில் நந்தினி பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here