தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த ஹன்சிகா தற்போது படவாய்ப்புகள் குறைந்ததால் புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார்.

முன்னணி நடிகை

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ஹன்சிகா. விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோயினாக வலம் வந்த ஹன்சிகா, தற்போது ‘மஹா’ என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடித்து வருகிறார். ஹன்சிகாவின் 50வது படமான ‘மஹா’வில் சிம்பு கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

புதிய தொழில்

சமீப காலமாக படவாய்ப்புகள் குறைய தொடங்கியதால், நடிகை ஹன்சிகா ‘தி பலூன் ஸ்டைலிஸ்ட்ஸ்’ என்ற பெயரில் புதிய நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். திருமணம் உள்ளிட்ட வீட்டு விசேஷங்களுக்காக பலூன்கள் மூலம் விதவிதமான அலங்காரங்களைச் செய்வதுதான் அந்த நிறுவனத்தின் பணி. ஏற்கனவே, கொரானோ ஊரடங்கு காலத்தில் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கிய ஹன்சிகா, தற்போது புதிய தொழில் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. பட வாய்ப்புகள் குறைந்து வருவதால், அவர் மற்ற தொழில்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டாதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here