பிரபல மலையாள திரைப்பட இயக்குநரும், நடிகை சரண்யா பொன்வண்ணனின் தந்தையுமான ராஜ் ஆண்டனி பாஸ்கர் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 95.

சரண்யா பொன்வண்ணன்

முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடிப்பதில் கைத்தேர்ந்தவர் நடிகை சரண்யா. சூர்யா, பரத், தனுஷ், சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு அம்மாவாக நடித்துள்ளார். மேலும் பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில், நடிகை சரண்யா பொன்வண்ணனின் தந்தையான பிரபல இயக்குநர் ராஜ் ஆண்டனி பாஸ்கர் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 95.

மாரடைப்பால் மரணம்

மலையாளத்தில் பல படங்களை இயக்கிய அவர், தமிழில் ‘கை நிறைய காசு’ மற்றும் ‘துள்ளி ஓடும் புள்ளி மான்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இதுவரை சுமார் 70 படங்களுக்கு மேல் அவர் இயக்கியுள்ளார்.கேரளாவின் ஆலப்புழா பகுதியைச் சேர்ந்த இவர், 1951 முதல் 1986 வரை சினிமாத்துறையில் பிசியாக இருந்து வந்த ராஜ் ஆண்டனி பாஸ்கர், மலையாளத்தில் கலியாள கல்யாணம், சீஃப் கெஸ்ட், கன்னூர் டீலக்ஸ், ஊர்மிக்கன் ஓமனிக்குன், சத்ரம் போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். வயது முதிர்வு காரணமாக மகள் சரண்யா பொன்வண்ணன் வீட்டில் வசித்து வந்த இஅவர், நேற்றிரவு 8 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். மலையாளம், தமிழ், சிங்களம் போன்ற மூன்று மொழிகளிலும் தனது இயக்கத்தால் அனைவரையும் பிரமிப்படைய செய்திருக்கிறார் ராஜ் ஆண்டனி. இவர் இயக்கிய துள்ளி ஓடும் மான் என்ற திரைப்படத்தில், சிவாஜி கணேசன் மற்றும் சந்திரபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். பல வெற்றிப்படங்களை இயக்கிய இவரது மரணச் செய்தியைக் கேட்ட திரையுலகினர் பலர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here