மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக கிரிக்கெட் வீரர் தோனி வாய் திறக்காதது ஏன் என்பது குறித்து ரெய்னா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தோனி வாழ்க்கை படம்

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் சின்னத்திரையில் இருந்து படிப்படியாக முன்னேறி தனது விடா முயற்சியாலும், திறமையாலும் பாலிவுட்டில் ஒரு முன்னணி நடிகராக நிமிர்ந்து நின்றார். பல படங்களில் அவர் நடித்திருந்தாலும், திறமைக்கும், நடிப்புக்கும் பெயர் கொடுத்தது இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்தது தான். அந்தப் படத்தில் அவர் நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லாத ஆட்களே கிடையாது. கிட்டத்திட்ட ஒன்றரை ஆண்டுகள் அவர் தோனியாகவே வாழ்ந்து இருக்கிறார். மேலும் தோனியின் ஸ்பெஷாலிட்டியான ஹெலிகாப்டர் ஷாட்டை கஷ்டப்பட்டு கற்றுக்கொண்டார் சுஷாந்த் சிங். தோனியின் நடை, உடை, பாவனை, ஹேர் ஸ்டைல் என்று மொத்தத்தில் தோனியை பார்த்தது மாதிரியே இருக்கிறது என்று பலரும் கூறியுள்ளனர். அந்த அளவிற்கு சுஷாந்த் சிங்கிற்கு பேரும், புகழும் சேர்த்தது தான் தோனி திரைப்படம்.

மர்மமான மரணம்

சுஷாந்த் வளர்ச்சியின் மீது யார் கண் பட்டதோ தெரியவில்லை. கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி எப்பொழுதும் போல தூங்கி எழுந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் அவர் தற்கொலை செய்துகொண்ட செய்தி, சினிமா பிரபலங்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிப் போட்டது. வளர்ந்த முன்னணி நடிகராக இருந்தவர் இப்படி தற்கொலை செய்து கொண்டாரே என்று முணுமுணுக்காத வாய்களே இல்லை. இன்றும் அவரது மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் மனம் தவித்துக் கொண்டிருக்கும் வேலையில், அனைவருக்கும் மரணத்தில் சந்தேகம் எழுந்தது. பல சர்ச்சைகள், பல போராட்டங்கள், இந்த வழக்கில் இருந்து கொண்டே தான் இருக்கின்றது. தற்போது சுஷாந்த் மரண வழக்கை சிபிஐ விசாரிக்கத் தொடங்கியுள்ளது.

ரெய்னா டுவீட்

சுஷாந்த் இறந்த பிறகு திரைப் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என்று பலரும் சமூக வலைத்தளத்தின் மூலம் இரங்கல் தெரிவித்தனர். ஆனால் தோனி இதுவரை எந்த ஒரு கருத்தையும் பதிவு செய்யாமல் அமைதியாகவே இருக்கிறார். தோனியின் வாழ்க்கை வரலாற்றில் நடித்து புகழ்பெற்ற சுஷாந்த் இறந்த பிறகு, தோனி அமைதியாகவே இருக்கிறார் என்று கேட்காத ஆளே இல்லை. பல ரசிகர்களும் தோனி மீது கோபத்தில் இருந்தனர். ஆனால் தோனியின் ரசிகர்களோ “எப்பொழுதும் தோனி எந்த ஒரு உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் தான் இருப்பார். இதைப்பற்றி தோனி சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார் என்று நினைத்துப் பார்ப்பது தவறு என்றும் கூறி வந்தனர். இந்த நிலையில், தோனி எந்த மனநிலையில் இருக்கிறார் என்று சுரேஷ் ரெய்னா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்; “இது இன்னும் என் சகோதரனை காயப்படுத்துகிறது. ஆனால் உண்மை வெல்லும் என்று எனக்கு தெரியும் #JusticeforSushantSingRajput” எனக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here