பொய், வஞ்சகம், கிசுகிசுக்கள், ஏமாற்றம் என அனைத்தும் சினிமாவில் நிறைந்திருப்பதாக பிரபல நடிகை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பரபரப்பான பேச்சு

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைந்த நாள் முதல் சினிமாவில் நெப்போட்டிசம், குரூப்பிசம் போன்றவைகள் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. சினிமா பின்புலம் உள்ள நடிகர், நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றும் ஆனால் சினிமா பின்னணி இல்லாதவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருப்பதாகவும் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். பல முன்னணி நடிகைகளும் இதனை ஒப்புக்கொண்டுள்ளனர். தமிழில் மட்டுமல்லாமல், இந்த பேச்சு அனைத்து மொழிகளிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. திறமை இருந்தால் மட்டுமே சினிமாவில் ஜெயிக்க முடியும் என நடிகர்கள் பலர் கூறி வந்தாலும், அவர்களது கருத்தை யாரும் ஏற்பதாக இல்லை. திறமை இல்லாத சினிமா பின்புல வாரிசுகள், பலரது வாய்ப்புகளைத் தட்டிப் பறிப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன.

நடிகை குற்றச்சாட்டு

சமீபத்தில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனக்கு நேர்ந்த அவமானங்களையும், வேதனைகளையும் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் தற்போது நடிகை தனுஸ்ரீ தத்தா அவரது கருத்தை தெரிவித்து உள்ளார். தமிழில் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ என்ற படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தவர் தான் தனுஸ்ரீ தத்தா. பல இந்தித் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் இவர், சினிமாவில் நடக்கும் சில பிரச்சனைகளை பற்றி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது; “எப்பொழுதும் எதிர்மறையாக சொல்லப்படும் கதைகள், பொய்கள், வஞ்சகம், உங்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய கிசுகிசுக்கள் அனைத்தும் நிறைந்தது தான் சினிமா. இந்த அனைத்து பிரச்சனைகளையும் நானும் அனுபவித்துள்ளேன். பிடிக்காத பல நடிகர், நடிகைகள் அவரைப் பற்றி தவறான தகவல்களை, கிசுகிசுக்களை பரப்பியதாக கூறி என்னை பல திரைப்படங்களில் இருந்து நீக்கினர். எனது முதல் படத்திலேயே இவை அனைத்தையும் நான் பார்த்து இருக்கிறேன். இது அனைத்தும் பாலிவுட்டில் உள்ள கலாச்சாரம். சினிமாவிற்கு புதிதாக வந்தவர்கள் மற்றவர்கள் சொல்வதற்கு உடன்படவில்லை என்றால், அவர்கள் அணுகுமுறை சரியில்லை என்று அவர்களுக்கு முத்திரை குத்திவிட்டு, அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை தட்டிப் பறிப்பது வழக்கமான ஒன்றாகவே இருந்து வருகிறது. ஆனால் சினிமா பின்புலம் உள்ளவர்களுக்கு எதுவும் கற்றுக் கொடுக்க தேவையில்லை. இவ்வாறு நடிகை நடிகை தனுஸ்ரீ தத்தா கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here