மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்காக அவரது காதலி ரியா சக்ரபோர்த்தி ஸ்பிரிட்சுவல் ஹீலரை அணுகிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பல மர்மங்கள்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் மறைந்த நாள் முதல் இன்று வரை தினம் தினம் புதுப்புது தகவல்களும், புதுப்புது செய்திகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன. மும்பை போலீசார் விசாரித்து வந்த இந்த வழக்கு தற்போது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுஷாந்த் தற்கொலை தொடர்பாக அவரது நெருங்கிய நண்பர்கள், சினிமா இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் என பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். சுஷாந்த் மரணம் தொடர்ந்து சர்ச்சையில் இருப்பதாகவும், அவரது தற்கொலையில் மர்மம் இருப்பதாகும் சுஷாந்தின் தந்தை பீகார் போலீசில் புகார் அளித்தார். மேலும் சுஷாந்தின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகார் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பணமோசடி தொடர்பாக அமலாக்கத்துறையும் ரியா சக்ரபோர்த்தியிடம் விசாரணை நடத்தி வருகிறது.

ஆன்மீக ஹீலர்

இந்நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத்தை ரியா சக்ரபோர்த்தி ஸ்பிரீட்சுவல் ஹீலரிடம் அழைத்து சென்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதிக மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டிருந்த சுஷாந்தை குணப்படுத்த ரியா சக்ரபோர்த்தி கடந்த ஆண்டு மோகன் சாதஷிவ் ஜோஷி என்ற ஆன்மீக ஹீலரை அணுகியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், மறைந்த நடிகர் சுஷாந்தை குணப்படுத்த ரியா சக்ரபோர்த்தி தன்னை அணுகியதாகவும், சுஷாந்த் 90 சதவீதம் குணமடைந்துவிட்டார் என்றும் கூறினார். மேலும் தான் அவரை குணமாக்கினேன் என்றும் மறுநாள் அவர் நலமாக இருந்தார் என்றும் மோகன் சாதஷிவ் ஜோஷி கூறினார். இதுதொடர்பான விசாரணைக்கு போலீசார் தன்னை அழைத்ததாக தெரிவித்த மோகன், ஆனால் தனது உடல் நலன் மற்றும் மருத்துவம் சார்ந்த விஷயங்களுக்காக தன்னால் செல்ல முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here