நடிகர் பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்திற்காக அவர் ரூ.100 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

பாகுபலி நாயகன்

‘ஈஸ்வர்’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் பிரபாஸ், தற்போது தெலுங்கில் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். பல படங்கள் ஹிட் கொடுத்தாலும், ‘பாகுபலி’ படத்தின் மூலம் அவர் இந்திய அளவில் ஒரு முன்னணி நடிகராக விளங்குகிறார். ‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களும் மெகா ஹிட்டானதை தொடர்ந்து, அவர் நடிக்கும் அனைத்து படங்களும் ஹிந்தியிலும் வெளிவர தொடங்கியிருக்கின்றன. ‘பாகுபலி’ பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் நடித்த ‘சாஹோ’ திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டாலும், கலவையான விமர்சனங்களையே பெற்றது. பல முன்னணி நடிகர், நடிகைகள் அப்படத்தில் நடித்திருந்தாலும், பெரிய அளவில் வசூலை பெறவில்லை என்பது அனைவருக்கும் வருத்தம் அளித்தது.

ரூ.100 கோடியா?

தற்போது ‘ராதே ஷ்யாம்’ என்ற படத்தில் நடித்து வரும் பிரபாஸ், அப்படத்தைத் தொடர்ந்து நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க இருக்கிறார். அதில், பிரபாஸூக்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோனேவை தேர்வு செய்துள்ளனர். இப்படத்தின் அப்டேட்கள் சமீபத்தில் வெளிவந்து அனைவரையும் பெருமளவில் கவர்ந்தது. இந்த படத்திற்காக நடிகர் பிரபாஸ் ரூ.100 கோடி சம்பளம் கேட்டதாக செய்தி ஒன்று பரவத் தொடங்கியுள்ளது. பிரபாஸுக்கு சம்பளமாக ரூ.70 கோடியும், டப்பிங் உரிமை ரூ.30 கோடியும் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனைக் கேட்ட பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here