Vivek At The Ezhumin Press Meet

விஜய் மற்றும் சூர்யா குறித்து சமூக வலைத்தளத்தில் தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நடிகை மீரா மிதுன் அவர்களது ரசிகர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

சர்ச்சை நாயகி

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மீரா மிதுன் சர்ச்சைக்கு பெயர் போனவர். சமூக வலைத்தளங்களில் எப்போதும் தனது கவர்ச்சிப் புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்ட அவர், தற்போது அதை நிறுத்திவிட்டு நடிகர், நடிகைகளை விமர்சிக்கத் தொடங்கியுள்ளார். ரஜினியை கன்னடர் என்றும் விஜய்யை கிறிஸ்துவர் என்றும் விமர்சித்த அவர், கமல்ஹாசனையும் சாடினார். திரிஷா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் மிரட்டினார். சூர்யாவை நடிக்கத் தெரியாதவர் என்று கிண்டலிடித்த மீரா மிதுன், விஜய் மனைவி சங்கீதா மற்றும் சூர்யா மனைவி ஜோதிகா ஆகியோரைப் பற்றி தரக்குறைவாக பேசி சர்ச்சையை உருவாக்கினார். தொடர்ந்து நடிகர் விஜய்க்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்.

மீண்டும் விமர்சித்த மீரா

இந்த நிலையில், தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு விடுத்த கிரீன் இந்தியா சவாலை, நடிகர் விஜய் நேற்று செய்து முடித்தார். இதற்காக திரையுலகினரும், ரசிகர்களும் விஜய்யை பாராட்டி வரும் நிலையில், மீரா மிதுன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்; “வில்லாவில் மரக்கன்று நடுவதெல்லான் சமூக அக்கறை அல்ல. எங்கு, எப்படி மரக்கன்று நடவேண்டுமென்று நடிகர் விவேக்கிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

மன்னிப்பு கேளுங்கள்

இந்தப் பதிவைப் பார்த்து கொந்தளித்து போன நடிகர் விவேக், மீரா மிதுனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது; மகேஷ் பாபு மற்றும் விஜய் மில்லியன் கணக்கில் ரசிகர்களை வைத்துள்ளார்கள். இயற்கைக்காக அவர்கள் சில விஷயங்களை செய்தால் அவர்களது ரசிகர்களும் அந்த நல்ல விஷயத்தை செய்வார்கள். மீரா மிதுன், நீங்கள் பதிவிட்டது மில்லியன் கணக்கான விஜய் ரசிகர்களின் உணர்வுகளை பாதிக்கும். எனவே, மகேஷ்பாபு மற்றும் விஜய் ரசிகர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேளுங்கள். தயது செய்து இரண்டு பிரபலங்களை எப்போதும் ஒப்பிடாதீர்கள். இது எனது வேண்டுகோள் எனக் குறிப்பிட்டுள்ளார். யாருடைய பேச்சுக்கும் அடங்காத மீரா மிதுன், விவேக்கின் அட்வைஸை கேட்டு இனியாவது அடங்குவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here