தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கும் பிரியா ஆனந்த் தனது காதல் தொடர்பாக வெளிவரும் வதந்திகளுக்கு விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தொடரும் கிசுகிசு

தமிழில் இளம் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் பிரியா ஆனந்த். சற்று படவாய்ப்புகள் குறைந்து இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருகிறார். பிரியா ஆனந்த் குறித்து அவ்வப்போது சில கிசுகிசுக்கள் வெளிவந்து கொண்டே இருந்தன. பிரியா ஆனந்துக்கும், நடிகர் அதர்வாவுக்கும் காதல் என்றும் இருவரும் நெருங்கி பழகி வருவதாகவும் கூறப்பட்டது. அதேசமயம், பிரியா ஆனந்துக்கும், கவுதம் கார்த்திக்கும் காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் வரை நெருங்கி விட்டார்கள் என்றும் பேசப்பட்டது.

காதலர்கள் அல்ல

இதுகுறித்து நடிகை பிரியா ஆனந்திடம் கேட்ட போது, அதர்வா, கவுதம் கார்த்திக் இருவருமே தனது காதலர்கள் அல்ல என பதிலளித்துள்ளார். இதனை நாங்கள் மூன்று பேருமே தனித்தனியாக உறுதி செய்து இருக்கிறோம் என்றும் அவர்கள் இருவருமே தனது நண்பர்கள் என்றும் கூறியுள்ளார். தான் நன்றாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதைப் போல், தன் நண்பர்கள் இருவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நல்ல சினேகிதியாக விரும்புகிறேன் என்றும் பிரியா ஆனந்த் தெரிவித்துள்ளர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here