கொரோனாவில் இருந்து தப்பிக்க குழந்தைகளுடன் அமெரிக்கா பறந்து சென்ற நடிகை சன்னி லியோன் ஒவ்வொரு நாளும் சொர்க்கத்தில் இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

கனவுக்கன்னி

தனது அழகான நடிப்பால் கோடானக்கோடி இளைஞர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர் நடிகை சன்னி லியோன். ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பாலிவுட் சினிமாவுக்கு சென்ற சன்னி லியோன், மும்பையிலேயே செட்டில் ஆனார். படங்களில் நடிக்க வசதியாக தனது கணவர் டேனியல் வெபர் மற்றும் 3 குழந்தைகளுடன் மும்பையிலேயே இருந்தார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்த போது, அதிலிருந்து தப்பிக்க அமெரிக்கா சென்றார்.

சொர்க்கம்

அங்குள்ள பண்ணை வீட்டில் தனது குடும்பத்துடன் பொழுதை கழித்து வரும் சன்னி லியோன், சமீபத்தில் கலிபோர்னியாவில் உள்ள கடற்கரையில் குழந்தைகளோடு ஆட்டம் போட்டு, அந்தப் புகைப்படங்களை வெளியிட்டார். தற்போது ஒவ்வொரு நாளும் சொர்க்கத்தில் இருக்கிறேன் எனக்கூறி தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டு உள்ள இன்ஸ்டாகிராம் பதிவில்; ஹலோ மக்களே கொரோனா சொர்க்கத்தின் மற்றொரு நாள்.  இதனை நான் நேசிக்கிறேன் எனக்கூறி காரில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here