சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகை வாணி போஜன் நடிகர் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளித்திரையில் வெற்றி

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து ஹிட்டான நடிகைகளுள் வாணி போஜனும் ஒருவர். ‘தெய்வமகள்’ என்ற சீரியல் மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்தவர் இவர். அந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இவர் வெள்ளித்திரையிலும் நடிகையாக அறிமுகமானார். சென்ற ஆண்டு தெலுங்கு படத்தில் நடித்த வாணி போஜன், தமிழில் ‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படமும் இவருக்கு நன்றாக கைகொடுத்தது. படத்தைப் பார்த்தப் பிரபலங்கள் பலர் தங்களது கருத்துக்களை கூறிய நிலையில், தெலுங்கின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவும் அப்படத்தை பார்த்து வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தார். வாணி போஜன் தற்போது வைபவ் நடித்துள்ள ‘லாக்கப்’ படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். அதேபோல், அதர்வாவுடன் மற்றொரு படமும் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.

விக்ரம் பிரபுவுடன் ஜோடி

விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கப் போகிறார் என்ற செய்தி வெளிவந்துள்ளது. பெயரிடப்படாத இப்படம், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் எனக் கூறப்படுகிறது. பிங்க் பிரிண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள அப்படத்தை, அறிமுக இயக்குநர் இயக்க உள்ளதாக தெரிகிறது. ‘கும்கி’ படத்திற்கு பிறகு எத்தனையோ படங்களில் நடித்தாலும், விக்ரம் பிரபுவுக்கு பெயர் சொல்லும் அளவிற்கு எந்தப்படமும் கை கொடுக்கவில்லை. சமீபத்தில் ‘வானம் கொட்டட்டும்’ மற்றும் ‘அசுரகுரு’ படங்கள் இவரது நடிப்பில் வெளிவந்தது. ஆனால் அந்த இரண்டு படங்களுக்குமே சுமாரான விமர்சனங்கள் தான் கிடைத்தது. அதனால் இப்படம் அவருக்கு கண்டிப்பாக வெற்றிப்படமாக அமைய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here