சினிமாத் துறையில் பல பிரச்சனைகள் இருந்தாலும், அந்த மாதிரி பிரச்சனையால் தானும் பாதிக்கப்பட்டுள்ளதாக பாலிவுட் நடிகை ரவீனா டெண்டன் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

பிரச்சனைகள்

சினிமாத்துறையை பொருத்தவரை பல பிரச்சனைகள் ஓடிக்கொண்டிருக்கிறது. பாலிவுட், கோலிவுட் மாஃபியா, நெபோடிசம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அதில் முக்கியமான ஒன்று “காஸ்டிங் கவுச்” எனப்படும் மீடூ பிரச்சனை. திரைத்துறையில் உள்ள மிகச்சிறந்த நடிகர்களும், தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் வாய்ப்புக்காக வரும் பெண்களை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று பல சர்ச்சைகள் காலம் காலமாக போய்க்கொண்டே இருக்கின்றது. இதைப்பற்றி பல முன்னணி நடிகைகளும் தான் அனுபவித்த கஷ்டமான சூழ்நிலையை பகிர்ந்துள்ளனர். ஆண்களும் இந்த மாதிரியான பிரச்சனையை சந்தித்து இருப்பதாக சிலர் குற்றச்சாட்டுகளை வைத்தனர். ஸ்ரீ ரெட்டி முதல் பாடகி சின்மயி வரை பலரும் இதனை வெளிப்படையாக கூறி வந்தனர்.

பகீர் குற்றச்சாட்டு

முன்னணி நடிகைகள் முதல் குணச்சித்திர நடிகைகள் வரை பலரும் தனக்கு இதில் எந்த ஒரு அனுபவமும் இல்லை என்றும் அந்த மாதிரி எல்லாம் எதுவும் கிடையாது என்றும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் பல கட்டுக் கதைகளை பேசி வருகின்றனர் எனவும் கூறி, இந்த பிரச்சனையிலிருந்து தாமதமாகவே விலகிவிட்டனர். இருந்தபோதும் 90களில் முன்னணி நட்சத்திரங்களாக இருந்து வந்த நடிகைகள் சிலர் இதைப்பற்றி தற்போது பேசத் துவங்கி உள்ளனர். அந்த வகையில், பாலிவுட் நடிகை ரவீனா டண்டன் இதுபற்றி பேசியிருப்பது, பாலிவுட் மட்டுமின்றி சினிமாத்துறையினர் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்திப் படங்கள் மட்டுமல்லாமல் கமல்ஹாசனுடன் ‘ஆளவந்தான்’ படத்திலும், அர்ஜுனுடன் ‘சாது’ படத்திலும் நாயகியாக நடித்தவர் தான் ரவீனா. 1990களில் பாலிவுட்டுக்கு என எழுதப்படாத சில விதிகள் இருந்ததாகவும், அவற்றைப் பின்பற்ற மறுத்ததால் தானும் பல படவாய்ப்புகளை இழந்துள்ளேன் என்றும் அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.

பட வாய்ப்புகள் தடுக்கப்பட்டது

இதுகுறித்து ரவீனா டண்டன் கூறுகையில்; நான் பல பட வாய்ப்புகளை இழந்ததால் பலரும் என்னை திமிர் பிடித்தவள் என்றும் கோபக்காரி என்றும் கூறி வந்தனர். மீடியாவிலும் என்னைப் பற்றிய பல தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருந்தன. பல முன்னணி நடிகர்கள் என்னை படுக்கைக்கு அழைத்து நான் அதை மறுத்ததால் என்னைப் பற்றி தவறான செய்திகளை பரப்பினார்கள். எனது சினிமா பயணத்தை முடிவுக்கு கொண்டு வரவும் முன்னணி நடிகர்கள் முயற்சித்தார்கள். அதிலிருந்து மீண்டு வருவதற்கே நீண்ட காலம் ஆகிவிட்டது. அவர்களுக்கு நான் ஈடு கொடுக்காததால் என்னை எந்த ஒரு படத்திற்கும் சிபாரிசு செய்ய மாட்டார்கள். பட வாய்ப்புக்காக இந்த மாதிரியான விஷயங்களில் நான் எப்பொழுதும் ஈடுபட மாட்டேன். இவ்வாறு ரவீனா கூறினார். தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகத்தில் இந்திரா காந்தி வேடத்தில் ரவீனா நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here