வருகிற 9ம் தேதி வங்கக்கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

இதுதொடர்பாக இந்திய வானிலை வானிலை மையம் கூறியிருப்பதாவது; வங்கக்கடலில் மீண்டும் 9ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. மத்திய மேற்கு மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

‘ரெட் அலர்ட்’

இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால், தமிழகத்தின் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் ‘ரெட் அலர்ட்’ விட வாய்ப்பு உள்ளது. கடந்த 4ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, 2 நாளில் வலுவிழக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here