நடிகர், நடிகைகளை தொடர்ந்து விமர்சித்த வந்த மீரா மிதுன், தற்போது அவர்களின் குடும்ப உறுப்பினர்களை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சை நாயகி 

சர்ச்சைக்கு மறுபெயர் என்றால் அது நடிகை மீரா மிதுன் தான். அந்த அளவிற்கு சர்ச்சைக்கு சொந்தமான இவர், தனது சமூக வலைத்தளப்பக்கங்களில் அவ்வப்போது கவர்ச்சிகரமான புகைப்படங்கள் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். பலரும் விமர்சித்தாலும், அறிவுரை கூறினாலும் அதனை அவர் கேட்பதாக இல்லை. ஆனால் ரசிகர்களை திட்டுகிறாரே தவிர பதிவிடுவதை நிறுத்துவில்லை. சமீபத்தில் ரஜினி, விஜய், சூர்யா, திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற முன்னணி நடிகர், நடிகைகளைச் சீண்டி பரபரப்பை ஏற்படுத்தினார். ரஜினியை கன்னடர் என்றும் விஜய்யை கிறிஸ்துவர் என்றும் விமர்சித்த மீரா மிதுன், கமல்ஹாசனையும் சாடினார். திரிஷா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் மிரட்டினார். பின்னர் சூர்யாவை வம்பிழுத்த மீரா மிதுன், அவருக்கு நடிக்கவே தெரியாது என்றும் சாதாரண காட்சிக்கு கூட 20 டேக் வாங்குவார் என்றும் கூறி கிண்டலடித்தார். மீரா மிதுனின் இந்த செயல், ரஜினி, கமல், விஜய், சூர்யா ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகாத வார்த்தைகள்

தமிழ் மட்டுமின்றி கங்கனா ரனாவத், கியாரா அத்வானி போன்ற பாலிவுட் நடிகைகளையும் மீரா மிதுன் வம்பு இழுத்துக் கொண்டிருந்தார். இந்த பிரச்சனைகள் அனைத்தும் ஒருபுறம் இருக்க, திடீரென்று உதயநிதி ஸ்டாலினுடன் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு, அரசியலுக்கு செல்லப் போகிறேன் எனக்கூறி அதிர வைத்தார். இப்படி பல பிரச்சனைகளில் தானாக வந்து சிக்கிக் கொள்ளும் மீரா மிதுன், தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு மீண்டும் ஒரு சர்ச்சையை உருவாக்கியுள்ளார். நடிகர்கள் சூர்யா மனைவி ஜோதிகாவையும், விஜய் மனைவி சங்கீதாவையும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார் மீரா. இதனைப் பார்த்த விஜய், சூர்யா ரசிகர்கள் செம கடுப்பில் இருக்கின்றனர். மீரா மிதுனின் இந்தச் செயல் நீண்டுகொண்டே போனால், அவர்மீது வழக்கு தொடரத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here