சுஷாந்த் சிங் ராஜ்புத், சுஷில் கவுடாவை தொடர்ந்து மராத்தி நடிகர் அஷூதோஷ் பாக்ரே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சி அடையைச் செய்துள்ளது.

சுஷாந்த் மரணம்

பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சுஷாந்தின் மரணம் திரையுலகம் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியது. சின்னத்திரை மூலம் பிரபலமாகி வெள்ளித்திரையில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்த சுஷாந்த் சிங் ராஜ்புத், திடீரென்று தற்கொலை செய்துகொண்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரது மரணத்திற்கான காரணத்தைக் கேட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல், பல முன்னணி பிரபலங்களும் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். சுஷாந்த் தற்கொலை தொடர்பாக மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுஷில் கவுடா மரணம்

பிட்ன்ஸ் டிரெய்னராக இருந்த சுஷில் கவுடா, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு “அந்தப்புரா” என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். இந்த சீரியல் மூலம் கன்னட சின்னத்திரையில் பிரபலமடைந்த அவர், பின்னர் பல திரைப்படங்களும் நடித்தார். கொரோனா பாதிப்பு காரணமாக தனது சொந்த ஊரான மாண்டியாவில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் தங்கியிருந்த சுஷில் கவுடா, கடந்த 7ம் தேதி தனது நண்பர் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இவரது இறப்பு கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுஷில் எதனால் தற்கொலை செய்துகொண்டார்? என்ன காரணம்? என்பது குழப்பமாகவே உள்ளது. இந்த நிலையில், சுஷாந்த் மற்றும் சுஷில் கவுடாவைப் போல மற்றுமொரு நடிகர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திரையுலகை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

மராத்தி நடிகர் தற்கொலை

மராத்தி திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்தவர் அஷூதோஷ் பாக்ரே. இவர் அதே மராத்தி மொழியில் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வரும் மயூரி தேஷ்முக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீப காலமாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படும் நிலையில், சில நாட்களாக தனது பெற்றோர் உடன் தங்கி வந்த அஷூதோஷ் நேற்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கடந்த சில மாதங்களாகவே திரைப்பிரபலங்கள் ஒவ்வொருவராக தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் திரைத்துறையினரை அடையச் செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here