பிரபல நடிகை பிரியாமணி தனது கட்டுமஸ்தான உடலை காட்டி வெளியிட்டு இருக்கும் புகைப்படம் தற்போது வைராகி வருகிறது.

தேசிய விருது வென்ற ‘முத்தழகு

மாடலிங் என்ற துறையை தன் பள்ளி பருவத்திலேயே துவங்கிய பிரியா வாசுதேவ் மணி என்கிற பிரியாமணி, அதே வயதில் சினிமாவிலும் நடிக்க வந்தார். தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்த அவர், பாலிவுட் பக்கமும் சென்றார். திரையுலக வாழ்க்கையை தெலுங்கு சினிமாவில் துவங்கிய பிரியாமணி, தமிழில் இயக்குநர் பாலு மகேந்திரா இயக்கிய ‘அது ஒரு கனா காலம்’ திரைப்படத்தில் நடித்தார். இப்படம் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. பின்னர் இவர் நடித்த ‘பெல்லைனா கொத்தாலு’ என்ற தெலுங்கு திரைப்படம் ஹிட் ஆக, வரிசையாக மூன்று படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதன்பின், தமிழில் பிரியாமணி நடித்த ‘பருத்திவீரன்’ திரைப்படம், அவருக்கு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தித் தந்தது. இப்படத்தில் தான் நடிகர் சிவக்குமாரின் இரண்டாவது மகன் கார்த்தி அறிமுகமானார். ‘பருத்திவீரன்’ திரைப்படத்தில் பிரியாமணியின் ஆகச்சிறந்த நடிப்பால், அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு விருதும் வழங்கப்பட்டது. பின்னர்பல கன்னட மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் அதிகம் நடித்தார் பிரியாமணி. தற்போது தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படம் தமிழில் பெரும் வெற்றி பெற்ற ‘அசுரன்’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடி பில்டரான பிரியாமணி

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் வீட்டிலேயே முடங்கியிருக்கும் நடிகை பிரியாமணி, தனது வித்தியாசமான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது தனது உடலை கட்டு மஸ்தான உடலாக மெருகேற்றியிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆனால் அது பிரியாமணி உடலே கிடையாது. அது தான் இந்த புகைப்படத்தின் சர்ப்ரைஸ். பிரியாமணி தனது இரண்டு கைகளையும் பின் பக்கம் வைத்து கொள்ள, அவரது கணவரின் கை உள்ளது போல கேமரா டிரிக் செய்து அந்த புகைப்படத்தை எடுத்துள்ளார் பிரியாமணி. ஒரு நொடி பார்க்கையில் அது பிரியாமணி உடல் போல இருக்கும். ஆனால் ஆழமாக பார்த்தால் அவருக்கு பின்புறம் இருப்பது அவரது கணவர். பிரியாமணியின் இந்தப் புகைப்படம் இணைய தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள், வடிவேலு இம்சை அரசன் புலிகேசி படத்தில் கூறிய ‘அந்த உடல் இந்த தலையுடன் இணையப்போகிறது’ என்ற ஒரு வசனத்தை பதிவிட்டு கலாய்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here