நடிகை அனுஷ்கா சினிமாவை விட்டு விலகப்போவதாக வெளியான செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சூப்பரான அறிமுகம் 

‘சூப்பர்’ என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமான நடிகை அனுஷ்கா, தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழிலும் முன்னணி நடிகையாகவே இருந்து வருகிறார். ‘ரெண்டு’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அவர், அப்படத்தில் பெருமளவு பேசப்படவில்லை. தனது முதல் படத்திலேயே தாராளக் கவர்ச்சியுடன் களமிறங்கிய நடிகை அனுஷ்காவிற்கு அப்படத்தில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போது வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வத்திருமகள், சகுனி, தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், இரண்டாம் உலகம், என்னை அறிந்தால் போன்ற பல வெற்றிப் படங்கள் வரிசை கட்டி வந்தன. பிறகு பாகுபலி என்ற மிகப்பெரிய பிரம்மாண்டமான வெற்றியையும் கொடுத்தார். உயரமான, வாட்டசாட்டமான, கம்பீரமான நடையால் அப்படத்தில் அனைவரையும் ஈர்த்தார்.

பின்னடைவு 

இஞ்சி இடுப்பழகி என்ற படத்திற்காக பல மடங்கு தனது உடல் எடையை கூட்டிய நடிகை அனுஷ்கா, அதன்பிறகு உடல் எடையை குறைப்பதற்காக மிகவும் மெனக்கெட்டுக் கொண்டு இருக்கிறார். திடீரென்று அவரது மார்க்கெட் சரிந்துவிட்டதாக தெலுங்கு சினிமா வட்டாரத்திலும் ஒரு பேச்சு அடிபடுகிறது. ஆனால் அதுதொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிக்கையும் அனுஷ்காவிடம் இருந்து வரவில்லை. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக சினிமாவில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த நடிகை அனுஷ்கா, சினிமாவை விட்டு விலகப் போவதாக வந்த தகவல் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here