நடிகர் விஷால் நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனத்தில் 45 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ரூ. 45 லட்சம் மோசடி

சென்னை வடபழனியில் உள்ள குமரன் காலனி பகுதியில் நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் ஃபேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனம் அமைந்துள்ளது. துப்பறிவாளன், சக்ரா ஆகிய படங்களை இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரியும் இந்நிறுவனத்தில், விஷாலின் ஆடிட்டர் அலுவலக கணக்குகளை சரிபார்த்துள்ளார். அப்போது 45 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது தெரியவந்தது.

போலீசில் புகார்

இதுதொடர்பாக அலுவலகத்தின் மேலாளரும், விஷாலின் உதவியாளருமான ஹரிகிருஷ்ணன், வடபழனி காவல் உதவி ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அதில் தங்கள் அலுவலகத்தில் கடந்த 6 வருடங்களாக கணக்காளராக பணிபுரிந்த பெண் ஒருவர் 45 லட்சம் ரூபாய் பணத்தை கையாடல் செய்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. சிறிது சிறிதாக பணத்தை கையாடல் செய்து அவரது உறவினர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்திவிட்டதாகவும், சம்மபந்தப்பட்ட அந்தப் பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. புகாரைப் பெற்றுக்கொண்ட உதவி ஆணையர், அதனை விருகம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளருக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். இதனையடுத்து விருகம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here