நடிகை வனிதா மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டுள்ள பீட்டர் பாலுக்கு மதுப்பழக்கம் உள்ளதாக வெளியான குற்றச்சாட்டை மறுத்து ஆதாரத்துடன் வீடியோ வெளியிட்டுள்ளார் வனிதா.

மூன்றாவது திருமணம்

சமூக வலைத்தளங்களில் மிகவும் ட்ரெண்டாக இருப்பவர் நடிகை வனிதா தான். அவர் கடந்த 27ம் தேதி மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அந்தப் புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாக பரவி வந்தது. தனது திருமணத்திற்கு மகள்களும் துணை நிற்பதாக வனிதா கூறி வந்த நிலையில், புதிய அப்பா எங்கள் வீட்டிற்கு வந்தது மிகவும் சந்தோஷம் அளிக்கிறது என அவரது மகள் ஜோவிதா டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வர, நெட்டிசன்கள் அதனை ஷேர் செய்தனர்.

தொடரும் பிரச்சனை

திருமணம் முடிந்த உடனே வனிதாவின் மூன்றாவது வாழ்க்கையும் சர்ச்சையாகவே பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் போலீசில் அளித்த புகார்தான். தனக்கு விவாகரத்து கொடுக்காமலேயே வனிதாவை பீட்டர் திருமணம் செய்துகொண்டதாகக் கூறி அவர் புலம்பி வருகிறார். மேலும் பீட்டர் ஒரு குடிகாரர் என்ற குற்றச்சாட்டையும் அவர் கூறியிருக்கிறார். எலிசபெத் போலீசில் புகார் அளித்துள்ளதை பார்த்த சக நடிகர், நடிகைகள் விவாகரத்து செய்து கொள்ளாத ஒருவரையா வனிதா திருமணம் செய்து கொண்டார் என்று பேசி வருகின்றனர்.

ஆதாரம் வெளியீடு

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பதிலடி அளிக்கும் வகையில், வீடியோ ஒன்றை தன் யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார் வனிதா. பீட்டர் பாலை பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர், பீட்டர் ஒரு டீட்டோட்டலர் என்றார். கிறிஸ்துவரான பீட்டர் அசைவ உணவுகள் கூட சாப்பிடுவதில்லை எனக் கூறியுள்ளார். பீட்டர் பால் குடிப்பதில்லை என்பதை காட்ட திருமண நிகழ்வில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவையும் வனிதா பகிர்ந்துள்ளார். அதில் அவர்கள் ஷாம்பெயின் பாட்டில் திறந்த பிறகு வனிதா அதை குடித்தாலும், பீட்டர் பால் மட்டும் ஆல்கஹால் இல்லாத ஒரு பானத்தைத் தான் குடித்ததாக வனிதா கூறி உள்ளார்.

நெட்டிசன்ஸ் கேள்வி

வனிதாவின் மூன்றாவது திருமணமும் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளதால் சமூக வலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. இத்தனை வருடங்கள் புகார் அளிக்காத பீட்டர் பாலின் மனைவி, தற்போது மட்டும் வருவது ஏன் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மறுபுறம் வனிதாவுக்கு எதிராகவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்தவர்களும் தங்கள் பங்கிற்கு சமூக வலைத்தளங்களில் கருத்து கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here