வெப்பச்சலனம் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

தமிழகத்தில் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் கனமழை பெய்தது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நேற்று லேசான மழை பெய்தது.

கடலோர மாவட்டங்களில் மழை

இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, தர்மபுரி, சேலம் ஆகிய பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் ஆய்வு மையம் கூறியுள்ளது.

லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here