பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சில தினங்களுக்கு முன்பு மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மனஅழுத்தத்தின் காரணமாக சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. சுஷாந்தின் மரணம் திரையுலகம் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாக உள்ளது. இந்த நிலையில், சுஷாந்த் மரணம் தொடர்பாக நடிகர் சிம்பு உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனது நண்பனான சுஷாந்த்தை இழந்து தவிப்பதாக சிம்பு குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here