கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கபட்ட தனது நண்பருக்கு எந்த மருத்துவமனையிலும் அனுமதி கிடைக்காததால் மிகவும் சிரமப்பட்டதாக டிவி நடிகரும், செய்தி வாசிப்பாளருமான வரதராஜன் நேற்று உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். வரதராஜனின் இந்தப் பேச்சுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். இதனையடுத்து தற்போது மீண்டும் வீடியோவை வெளியிட்டுள்ள வரதராஜன், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு முழு வீச்சில் சிறப்பாக செயல்படுவதாக பாராட்டு தெரிவித்துள்ளார். ஒரேநாளில் நடிகர் வரதராஜன் திடீர் பல்டி அடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here