பாகுபலிக்கு பிறகு ராஜமெளலி இயக்கும் ‘RRR’ படத்தில் நடிகை ஸ்ரேயா சரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘RRR’ படத்தின் கதை

சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீத்தாராம ராஜூ, கொமரம் பீம் ஆகியோர் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டு ‘RRR’ திரைப்படம் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியா பட், தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர், ஹாலிவுட் நடிகர் ரேய் ஸ்டீவன்சன், அலிசான் டூடி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தை, அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கொரனோ ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் குறித்த நேரத்திற்குள் படத்தை முடிக்க முடியாது என்று படக்குழுவினர் கூறியிருக்கின்றனர்.

3 மொழிகளில் வெளியீடு

‘RRR’ படத்தில், பாலிவுட் ஹீரோயின் ஆலியா பட்டுக்கு முக்கியமான கதாபாத்திரம். தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் உருவாக்கப்பட்ட ராம்சரணின் அறிமுகக் காட்சி சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அஜய் தேவ்கன், ஆலியா பட் ஆகியோர் இந்தி பதிப்பு காட்சியை வெளியிட, தெலுங்கு வெர்ஷனை ராம்சரண் மற்றும் ராஜமெளலி வெளியிட்டனர். தமிழ்ப் பதிப்பை ஜூனியர் என்.டி.ஆர் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டார். தமிழ் மோஷன் போஸ்டரையும் ஜூனியர் என்.டி.ஆர் வெளியிட்டிருந்தார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஜூனியர் என்.டி.ஆர் தனது சொந்த குரலிலேயே டப்பிங் பேசியுள்ளார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரேயா

‘RRR’ படத்தில் நடிகை ஸ்ரேயா சரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. தற்போது கணவர் ஆண்ட்ரி கோஸ்சீவுடன் ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் இருக்கும் நடிகை ஸ்ரேயா, இப்படத்தில் கமிட்டானதை அடுத்து இந்தியா வரவிருக்கிறார். கூடிய விரைவில் இந்தியா வரவிருக்கும் ஸ்ரேயாவை ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here