தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காதல், தோல்வி

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவும், நடிகரும், இயக்குனருமான டி. ராஜேந்திரின் மகனுமான சிம்பு முதலில் நயன்தாரா, பின்னர் ஹன்சிகா ஆகியோரை காதலித்ததாக கிசுகிசுக்கப்பட்டது. இரு காதல்களும் தோல்வியில் முடிந்ததால் அவருக்கு கடந்த சில ஆண்டுகளாக திருமண பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

ஜாதகப் பொருத்தம்

பல இடங்களில் இருந்து மணப்பெண்களின் புகைப்படங்களும், ஜாதகங்களும் வந்து குவிந்த நிலையில், ஜாதகம் பொருந்தாததால் அவருடைய திருமணம் தள்ளிப்போனது. சில ஜாதகங்கள் பொருந்தினாலும், சிம்புவுக்கு பிடிக்கவில்லை. அவருக்கு பிடித்தால், குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. இந்த காரணங்களால் மணப்பெண் அமையவில்லை.

விரைவில் திருமணம்?

இது, அவருடைய குடும்பத்தினரை போலவே ரசிகர்களுக்கும் மிகப்பெரிய வருத்தமாக இருந்தது. சிம்புவுக்கு எப்போது திருமணம் நடக்கும்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகிக் கொண்டே போனது. இந்த நிலையில், நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோடீஸ்வர பெண்

லண்டனில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்த அந்த மணப்பெண், சிம்புவின் குடும்பத்துக்கு தூரத்து உறவினராம். அந்த குடும்பத்துக்கு சொந்தமாக லண்டனில் சில கல்லூரிகள் உள்ளன. கொரோனா பிரச்சனைகள் முடிந்ததும் சிம்புவுக்கு திருமணம் நடைபெறும் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here