காக்க காக்க படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க நானும், சூர்யாவும் தயாராக இருக்கிறோம் என நடிகை ஜோதிகா விருப்பம் தெரிவித்துள்ளார்.

‘காக்க காக்க’

கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா – ஜோதிகா இணைந்து நடித்த திரைப்படம் ‘காக்க காக்க’. அன்புச்செல்வன் என்ற கண்டிப்பான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார். ஜீவன் வில்லனாக நடித்தார். 2003ம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது.

ரசிகரின் கேள்விக்கு பதில்

நேரடியாக OTT தளத்தில் வெளியான ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை சூர்யாவும், ஜோதிகாவும் வீட்டில் இருந்தபடியே விளம்பரப்படுத்தி வந்தனர். அதன் ஒருபகுதியாக ரசிகர்களின் கேள்விகளுக்கு ஜோதிகா பதிலளித்தார்.

நிச்சயம் நடிப்பேன்

அப்போது, ரசிகர் ஒருவர் ஜோதிகாவிடம் காக்க காக்க 2-ம் பாகம் உருவானால் சூர்யாவுடன் நடிப்பீர்களா? என கேட்டார். இதற்கு பதிலளித்த ஜோதிகா, கவுதம் மேனன் ‘காக்க காக்க 2’ படத்திற்காக சுவாரஸ்யமான கதையுடன் வந்தால் நானும் சூர்யாவும் நிச்சயம் நடிப்போம் என தெரிவித்துள்ளார். 

மனஸ்தாபம்

ஜோதிகாவின் இந்த பதிலை அடுத்து கவுதம் மேனனிடம், காக்க காக்க 2ம் பாகம் ஸ்கிரிப்ட் ரெடி செய்யச் சொல்லி ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சூர்யாவிடம் ஸ்கிரிப்ட் சொல்லச் சென்றார் கவுதம் மேனன். அவரது இயக்கத்தில் நடிப்பதாக கூறிய சூர்யா, ஸ்கிரிப்ட்டை முழுமையாகச் சொல்லாததால் விலகினார். இதனால் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது குறிபிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here