தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

புயல்

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்கிழக்கு அரபிக் கடல், கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது நாளை மறுநாள் புயலாக வலுவடையக் கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

இதனால் ஜூன் 5ம் தேதி வரை அரபிக்கடல் ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். கேரளாவில் தென்மேற்கு பருவமழை நாளை துவங்க சாதகமான சூழல் நிலவுகிறது. இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஜூன் 1ல் பருவமழை

வழக்கமாக ஜூன் 1ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கும். ஆனால் இந்த வருடம் ஜூன் 5ம் தேதி தான் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், நாளையே துவங்க சாதகமான சூழல் நிலவுவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here