கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் கதை, திரைக்கதையை எழுதி முடித்துள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி.

பிச்சைக்காரன்

2016ம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பிச்சைக்காரன்’. இப்படத்தை விஜய் ஆண்டனியே தயாரித்து, இசையமைத்திருந்தார். சாட்னா டைட்டஸ், பகவதி பெருமாள், முத்துராமன், தீபா ராமனுஜம் உள்ளிட்ட பலர் அதில் நடித்தனர்.

வசூல் சாதனை

இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து, பிச்சக்காடு என்ற பெயரில் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட்டு அங்கும் வசூல் குவித்தது. இந்த படத்தின் வெற்றியால் விஜய் ஆண்டனியின் நட்சத்திர அந்தஸ்து உயர்ந்தது.

பிச்சைக்காரன் 2

தற்போது ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் உருவாக்கத்தில் தீவிரமாக இருக்கிறார் விஜய் ஆண்டனி. இந்தக் கொரோனா ஊரடங்கு காலத்தில் விஜய் ஆண்டனி இந்தப் படத்தின் கதையை எழுதி முடித்துள்ளார். முதல் பாகத்தை இயக்கிய சசி வெவ்வேறு படங்களை இயக்கவுள்ளதால், இதனை அவர் இயக்கவில்லை.

சம்பளம் குறைப்பு

இதுகுறித்து விஜய் ஆண்டனி கூறுகையில்; நான் கொரோனா ஊரடங்கில் பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி வருகிறேன். ஊரடங்கில் புதிய எடிட்டிங் மென்பொருளை பயன்படுத்தும் முறை மற்றும் சினிமா சம்பந்தமான தொழில்நுட்பங்களை கற்று வருகிறேன். ஊரடங்கினால் சம்பளத்தை 25 சதவீதம் குறைத்து இருக்கிறேன். என்னை நம்பி முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களுக்கு உதவவே இந்த முடிவை எடுத்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here