தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளிலேயே சமூக விலகலை கடைபிடித்து தொழுகை நடத்தினர்.

ரமலான் பண்டிகை

இஸ்லாமியர்களின் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ரம்ஜான் நோன்பு இருப்பதும் ஒன்று. ரமலான் மாதம் முழுவதும் நாள்தோறும் பின்னிரவில் உணவருந்திவிட்டு அதன்பின்னர் சூரியன் மறைவு வரை நோன்பு மேற்கொள்ளப்படும். 30 நாட்கள் நோன்பு முடிந்து பிறை தெரிந்ததும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.

வீட்டிலேயே தொழுகை

அந்த வகையில், இந்தியாவில் கேரளா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் முதலில் பிறை காணப்பட்டதையடுத்து நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. ஊரடங்கு விதிமுறைகள் காரணமாக பள்ளிவாசல்களில் தொழுகை நடைபெறவில்லை. இஸ்லாமியர்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்தி, ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

இன்று கொண்டாட்டம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வழக்கமான உற்சாகத்துடன் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட முடியாததால், மிகவும் எளிமையாக கொண்டாடினர். பள்ளிவாசல்கள் திறக்கப்படாததால் இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளிலேயே குடும்பத்தினருடன் சமூக இடைவெளியை கடைபிடித்து தொழுகை நடத்தினர்.

சமூக விலகல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரளாவைப் பின்பற்றி ஒரு நாள் முன்னதாகவே நேற்று ரம்ஜான் கொண்டாடப்பட்டது. வளைகுடா நாடுகள் அனைத்திலும் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சமூக விலகலைக் கடைப்பிடித்து மக்கள் இப்பண்டிகையை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here