மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘த்ரிஷ்யம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க அப்படத்தின் இயக்குனர் முடிவு செய்துள்ளார்.

சூப்பர் ஹிட் படம்

பிரபல மலையாள இயக்குனர் ஜீத்துஜோசப் இயக்கத்தில் மோகன்லால் – மீனா நடிப்பில் வெளியான ’த்ரிஷ்யம்’ திரைப்படம் உலக அளவில் ஹிட்டானது. மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ் உள்பட பல இந்திய மொழிகளில் அப்படம் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் ’பாபநாசம்’ என்ற பெயரில் கமலஹாசன், கவுதமி நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

‘த்ரிஷ்யம் 2’

இந்த நிலையில், ‘த்ரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என்று மோகன்லால் ரசிகர்கள் சமூக வலைத்தளம் மூலம் கடந்த சில ஆண்டுகளாகவே கேள்வி எழுப்பி வந்தனர். அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப ‘த்ரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க ஜீத்து ஜோசப் முடிவு செய்துள்ளார்.

மீண்டும் மோகன்லால், மீனா

மீண்டும் மோகன்லால் – மீனா நடிக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு உத்தரவு முடிந்தபின் தொடங்கயிருப்பதாக ஜீத்து ஜோசப் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜித்துஜோசப் இயக்கத்தில் மோகன்லால், த்ரிஷா நடிப்பில் ’ராம்’ என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படம் முழுக்க முழுக்க வெளிநாட்டில் படமாக்க வேண்டி இருப்பதால் அதன் படப்பிடிப்பு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here