தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் நடித்த இளம் நடிகை சார்மி நடிப்பில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

இளம் நடிகை

சிம்பு கதாநாயகனாக அறிமுகமான ‘காதல் அழிவதில்லை’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சார்மி. அதன்பின் ‘காதல் கிசு கிசு’, ‘ஆஹா எத்தனை அழகு’ ஆகிய படங்களில் நடித்தார். தமிழில் பட வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடப் படங்களில் நடித்து வந்தார்.

நடிப்பிற்கு முழுக்கு

கடைசியாக, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘ஜோதி லட்சுமி’ என்ற படத்தில் சார்மி கதாநாயகியாக நடித்தார். அதன்பிறகு படங்களில் நடிக்காமல் இருந்து வந்த அவர், நடிப்பை விட்டு விலக முடிவு செய்திருந்தார். இந்த நிலையில், தற்போது நடிப்பை விட்டு முழுவதுமாக விலகுவாக அறிவித்துள்ளார்.

தயாரிப்பு பணியில் ஈடுபாடு

தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்னாத்துடன் இணைந்து தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார் சார்மி. இதன் காரணமாக நடிப்பிற்கு முழுக்கு போட்டதாக கூறப்படுகிறது. சார்மி அறிமுகமான காலத்தில் அறிமுகமான திரிஷா, அனுஷ்கா ஆகியோர் இன்னமும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here