தமிழகத்தில் நேற்று மதுபானக்கடைகள் திறக்கப்பட்டு 163 கோடி ரூபாய்க்கு மது விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் திறப்பு

தமிழகத்தில் மதுபானம் விற்பனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்தது. இதனையடுத்து நேற்று தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட பகுதி, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களை தவிர்த்து மற்ற இடங்களில் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன.

மது விற்பனை

கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக மதுப்பிரியர்களுக்கு வண்ண டோக்கன்கள் வழங்கப்பட்டது. மேலும் சமூக இடைவெளி கண்டிப்புடன் கைடைபிடிக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகள் முன்பு குவிந்த மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

ரூ. 163 கோடிக்கு விற்பனை

நேற்று ஒரேநாளில் 163 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக திருச்சியில் 40.5 கோடி ரூபாய்க்கும், கோவையில் 33.5 கோடி ரூபாய்க்கும் மது விற்பனையாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here