கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு அடுத்த கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்திய பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 49 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த நிலையில், தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்துவிட்டு கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யுமாறு விஜய் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here