நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் மாலத்தீவு சென்றது குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

பிஸி நடிகை

கன்னடத்தில் ‘கிரிக் பார்ட்டி’ என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் ‘கீதா கோவிந்தம்’, ‘தேவதாஸ்’ போன்ற படங்களில் நடித்த இவருக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து ‘டியர் காம்ரேட்’, ‘புஷ்பா’ போன்ற வெற்றிப் படங்களை கொடுத்தார். திரையுலகில் வேகமாக வளர்ந்து வரும் ராஷ்மிகா, தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். விஜய்யுடன் ‘வாரிசு’ படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். சினிமாவிற்கு வந்த சில ஆண்டுகளிலேயே ஒரு முன்னணி நடிகையாக உருவெடுத்து பல ரசிகர்களைப் பெற்றுள்ளார் ராஷ்மிகா.

யாரோடும் சேரமாட்டேன்

இந்த் நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் மாலத்தீவு சென்றதாக கூறப்படுவது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக ராஷ்மிகா கூறியிருப்பதாவது; “சமீபகாலமாக சமூக வலைதளங்களில் என்மீது அவதூறு செய்வது அதிகமாகிவிட்டது. சிறு வயது முதலே ஹாஸ்டலில் தங்கி படித்தேன். பள்ளியில் அதிகமாக யாரோடும் சேரமாட்டேன். அதனால் நிறைய பேர் எனக்கு திமிர் என்று தவறாக புரிந்து கொண்டார்கள். அறையில் தனியாக உட்கார்ந்து அழுத நாட்கள் கூட உண்டு. வாழ்க்கையில் இன்னும் நிறைய தூரம் பயணம் செய்ய வேண்டியது இருக்கிறது. இந்த சிறிய பிரச்சினைக்கு நீ இப்படி இடிந்து போய்விட்டால் எப்படி என்று அம்மா சொன்ன வார்த்தைகள் எனக்குள் தன்னம்பிக்கையை வளர்த்தன.

டூர் சென்றால் தவறா?

ஒரு எல்லை வரை காத்திருப்பேன். எல்லை தாண்டினால் யாராக இருந்தாலும் சரி எதிர்த்து பதிலடி கொடுப்பேன். மாலத்தீவுக்கு விஜய் தேவரகொண்டாவுடன் சென்றீர்களாமே? அவருடன் காதலில் இருக்கிறீர்களா? இப்படி எல்லாம் விமர்சனம் செய்கிறார்கள். விஜய் தேவரகொண்டா எனது நண்பர். அவரோடு ‘டூர்’ சென்றால் தவறு என்ன?” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here