தெலுங்கு சினிமாவில் அதிக வாய்ப்புகள் வருவதால் தெலுங்கு மொழி கற்று வருவதாக இளம் நடிகை இவானா தெரிவித்துள்ளார்.
எகிறிய மார்க்கெட்
‘நாச்சியார்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை இவானா. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘ஹீரோ’ படத்திலும் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவானாவுக்கு ‘லவ் டுடே’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ‘லவ் டுடே’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.100 கோடிகளுக்கு மேல் வசூலை வாரி குவித்தது. ஹீரோயினாக நடித்த முதல் படமே சூப்பர்ஹிட் ஆனதும் இவானாவுக்கு மார்க்கெட் எகிறியது.
கற்று வருகிறேன்
நடிகை இவானா தற்போது “சிங்கிள்” என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் தெலுங்கில் முதல்முறையாக அவர் அறிமுகமாகி உள்ளார். கார்த்திக் ராஜு இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ரீ விஷ்ணு கதாயநாயகனாக நடித்துள்ளார். இதற்கிடையே நடிகை இவானா பேட்டி ஒன்றில் பேசியதாவது; “தற்போது நான் பி.ஜி படித்துக் கொண்டு இருக்கிறேன். நான் படித்துக் கொண்டே சினிமாவில் நடித்தும் வருகிறேன். எனக்கு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நல்ல வாய்ப்புகள் வருகின்றன. தற்போது நடிக்கும் ‘சிங்கிள்’ படத்திற்காக தெலுங்கு மொழியை கற்றுக் கொண்டுவருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.