சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’. ராஜ்கமல் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகை சாய்பல்லவி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘அமரன்’ படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில்: “முகுந்த் வரதராஜன் போலதான் என் அப்பாவும். அவர், முகுந்த் போல போருக்கு செல்லவில்லை. ஆனால் அவரும் தன் வேலையில் இருக்கும்போதுதான் உயிரிழந்தார். அவர் வேலையில் அதிக அழுத்தம். அதுதான் அவரது மரணத்துக் காரணம்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here