சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரையும் கவர்ந்த ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் ரூ. 150 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

திரில்லர் படம்

மலையாள திரைப்படமான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் வெளியானது. கொடைக்கானல் சுற்றுலா செல்லும் நண்பரிகளில் ஒருவர் குணா குகையில் சிக்குவதும், அவரை மீட்க நண்பர்கள் போராடுவதுமாக கதை அமைந்துள்ளது. பரபரப்பான திரில்லர் படமான இப்படத்தை இயக்குநர் சிதம்பரம் இயக்கி இருந்தார்.

வசூல் சாதனை

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைத்து தரப்பினரிடமும் அமோக வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. இதுவரை ரூ. 150 கோடி வசூலித்துள்ளதால், படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here