உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் அஜித்குமாருக்கு என்ன ஆச்சு என்ற புதிய வெளியாகி இருக்கிறது.

ஏகே 62

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்குமார் துணிவு படத்தை தொடர்ந்து தற்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். மகிழ்திருமேனி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது. தனது மகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சென்னை வந்த அஜித்குமார், மீண்டும் படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்லவிருந்தார்.

திடீர் உடல் நலக்குறைவு

இந்த நிலையில் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து பல்வேறு விதமான தகவல்கள் பரவின. குறிப்பாக மூளையில் ஏதோ பிரச்சனை என்றும் அதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் பரவியது. இதனை அஜித் தரப்பு மறுத்துள்ளது.

இதுதான் உண்மை

தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, அஜித்குமாருக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொண்டபோது காதுக்கு கீழே நரம்பு வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டு, அரைமணி நேரத்தில் அதற்கான சிகிச்சை முடிந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார் என்று சொல்லப்பட்டுள்ளது. மேலும் இன்று இரவு அல்லது நாளை அவர் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here