துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம்”, ராஜா, மனம் கொத்திப் பறவை, பெண்ணின் மனதை தொட்டு, தீபாவளி, விஷ்ணு விஷால் நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் S.எழில். இவர், விமல் நடிப்பில் தேசிங்கு ராஜா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் அறிமுக விழாவில் பல முன்னணி இயக்குநர்கள் கலந்து கொண்டனர். அப்போது நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரும் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் “விஜய்யின் கேரியரில் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களில் ஒன்று துள்ளாத மனமும் துள்ளும். அந்த படத்தின் கதையைக் கேட்டதும் உடனே விஜய் கால்ஷீட் கொடுத்துவிட்டேன். அந்தளவுக்கு திரைக்கதை என்னை ஈர்த்தது. அப்போது விஜய் என்ன சூப்பர் ஸ்டார் நடிகரா? அந்த படத்தில் விஜய் இல்லாமல் யார் நடித்திருந்தாலும் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும். அதுதான் ஒரு படத்தின் உண்மையான வெற்றி” என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here