உலகமே நவீன தொழில்நுட்பத்திற்கு மாறி வரும் நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் மட்டும் சுதந்திரத்திற்கு முன்பு இருந்த நிலைதான் தொடர்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளர்.

நவீனப்படுத்த வேண்டும்

நெல்லை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு சேதங்களை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சென்னை வானிலை ஆய்வு மையத்தை இழுத்து மூட வேண்டும். சில மாவட்டங்களில் கனமழை பெய்யும், சில மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என தான் எப்போதும் அறிவிக்கிறார்கள். உலகமே நவீன தொழில்நுட்பத்திற்கு மாறி வரும் போது, சென்னை வானிலை ஆய்வு மையம் மட்டும் சுதந்திரத்திற்கு முன்பு இருந்த நிலைதான் தொடர்கிறது. எனவே வானிலை ஆய்வு மையத்தை நவீனப்படுத்த வேண்டும்.

அரசியல் பார்க்கக்கூடாது

காலநிலை மாற்றம் குறித்து நான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். மத்திய அரசு நிவாரண நிதியை விரைந்து விடுவிக்க வேண்டும். நிவாரண நிதி விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் பார்க்கக்கூடாது. மீட்பு, நிவாரண பணிகளை அமைச்சர்கள் விரைவுப்படுத்த வேண்டும். ரூ.6000 வெள்ள நிவாரண நிதி நிச்சயம் போதாது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here