சென்னையில் மூத்த வழக்கறிஞர் தடா சந்திரசேகரன் படத் திறப்பு விழா நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனைவி கயல்விழி பேசியதாவது; “என்னை சீமான் முதன் முதலாக சந்தித்த பின் எல்லோரு அப்பா, அம்மாகிட்ட சொல்லுவங்க.. ஆனால் தடா சந்திரசேகரிடம்தான் சொன்னார். எங்க திருமணம் நடக்கனும்னு ரொம்ப உறுதியாக இருந்தார். எங்களுக்குள் (எனக்கும் சீமானுக்கும்) ஆரம்ப காலத்துல சில பிரச்சனைகள், சின்ன சின்ன சண்டைகள் வரும்போது எங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டு வெச்சு பேசும் போது, சீமானிடம். “தம்பி.. இப்ப வேற… இது குடும்பமாகிருச்சு.. இதை எல்லாம் மாத்திகிடனும்னு” நிறைய சொல்வார். ஆனால் எங்கிட்ட எப்பவும் சொல்ற வார்த்தை “தம்பி நல்லவன்மா! அவன் சரியா பண்ணுவான்மா.. என் தம்பி நல்லவன்மா”.. இந்த வார்த்தையை மாமா இப்ப வரைக்கும் என்கிட்ட சொல்லி இருக்கிறார்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here