‘சூது கவ்வும்’, ‘ஓ மை கடவுளே’, ‘நித்தம் ஒரு வானம்’ உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் அசோக் செல்வன். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான ‘போர்தொழில்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அசோக் செல்வனும் நடிகர் அருண்பாண்டியனின் மகளும், நடிகையுமான கீர்த்தி பாண்டியனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதனைதொடர்ந்து இன்று இவர்களின் திருமணம் பாளையங்கோட்டை அருகே உள்ள இட்டேரியில் நடந்து முடிந்துள்ளது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here