சினிமாவில் நடிக்க வந்த புதிதில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை நடிகை ரெஜினா மனம் திறந்து பேசியுள்ளார்.

பிஸி நடிகை

கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானவர் நடிகை ரெஜினா கசான்ரா. பின்னர் ராஜதந்திரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், சிலுக்குவார் பட்டி சிங்கம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரெஜினா, தமிழில் எதிர்பார்த்த அளவு ஹிட் கொடுக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அர்த்தம் புரியல

இந்த நிலையில் சினிமா வாய்ப்பு கேட்டபோது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த கசப்பான அனுபவத்தை அவர் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து ரெஜினா அளித்துள்ள பேட்டியில், “நான் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் பட வாய்ப்பு கேட்டு சிலரை அணுகினேன். அதில் ஒருவர் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு நடிக்க வாய்ப்பு கொடுக்கிறேன். அட்ஜஸ்ட்மென்டுக்கு சம்மதித்தால் உடனே படப்பிடிப்புக்கு செல்லலாம் என்றார். அவர் சொன்ன அர்த்தம் புரியவில்லை. சம்பளம் விஷயம் பற்றி சொல்கிறார் என்று நினைத்து சரி எனது மானேஜர் உங்களிடம் பேசுவார் என்றேன். மானேஜர் பேசிய பிறகுதான் போன் செய்தவர் படுக்கைக்கு அழைக்கும் நோக்கில் என்னை கேட்டு இருக்கிறார் என்று புரிந்தது” என்று ரெஜினா கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here