விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதுவரை 8 சீசன்கள் வெற்றிகரமாக கடந்த இந்த நிகழ்ச்சி, 9 வது சீசனை சமீபத்தில் தொடங்கி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் சிங்கர் 9 சீசன் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி சென்னையில்ல் கோலாகலமாக நடைபெற்றது. இறுதிப்போட்டியில் அபிஜித், அருணா, பூஜா, பிரியா, பிரசன்னா ஆகியோர் பங்கேற்றனர். போட்டியில், சீசன் 9 வின்னர் டைட்டிலை அருணா தட்டிச் சென்றார். பிரியா ஜெர்சன் 2 வது இடமும், பிரசன்னா 3 வது இடம் பிடித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பிரபல இஅசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், டைட்டிலை தட்டிச் சென்ற அருணாவிற்கு ரூ.60 லட்சம் மதிப்பிலான வீடு பரிசாக வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here