படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக படுகாயமடைந்த நடிகர் பிருத்விராஜூ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னணி நடிகர்

தமிழில் கனா கண்டேன், மொழி, சத்தம் போடாதே, அபியும் நானும், நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிருத்விராஜ். மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் பிருத்விராஜ் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான ‘அய்யப்பனும் கோஷியும்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

விபத்து

தற்போது பிரித்விராக் நடிப்பில் ‘விளையாத் புத்தா’ என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. இது படம் சந்தன மரக்கடத்தல் குறித்த படம் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இடுக்கி மாவட்டம் மரையூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 50 நாட்களுக்கும் மேலாக படபிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், நடிகர் பிருத்விராஜ் அந்தரத்தில் பறந்தபடி சண்டையிடுவது போன்ற சண்டை காட்சிகள் நேற்று படமாக்கப்பட்டது. இந்த காட்சியில் டூப் எதுவும் போடாமல் நடிகர் பிருத்விராஜ் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். இதில் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் பிருத்விராஜுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து வலியால் துடித்த நடிகர் பிருத்விராஜை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை செய்யவும் அறிவுறுத்தி உள்ளார்களாம். அவருக்கு இன்று அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.

ரசிகர்கள் பிரார்த்தனை

அறுவை சிகிச்சை செய்தால் குறைந்தது 2 மாதங்களாவது ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறி உள்ளார்களாம். இதனால் ‘விளையாத் புத்தா’ படத்தின் படப்பிடிப்பு பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது. நடிகர் பிருத்விராஜ் விரைவில் குணமடைய வேண்டி அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here