பாலியல் துன்புறுத்தலுக்கு மன்னிப்பே இருக்கக் கூடாது என பிரபல நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி தெரிவித்துள்ளார்.

பரபரப்பு புகார்

2001ம் ஆண்டு வங்க மொழியில் வெளியான ‘ஹேமந்தர் பகி’ என்ற திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகனமானவர் ஸ்வஸ்திகா முகர்ஜி. ‘காலா’ என்ற படம் மூலம் இந்தி திரையுலகுக்கு வந்தார். இந்தியில் நிறைய படங்களில் நடித்திருக்கும் இவர், தற்போது ‘ஷிப்பூர்’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கடந்த மே 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்த நிலையில் சில காரணங்களால் வெளியாகவில்லை. இதனிடையே இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் சந்தீப் சர்கார் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக ஸ்வஸ்திகா முகர்ஜி கொல்கத்தாவில் உள்ள கோல்ப் கிரீன் போலீசில் புகார் அளித்திருந்தார்.

மன்னிப்பே கூடாது

இந்நிலையில், ‘ஷிப்பூர்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. அதில் வருகிற 30 ஆம் தேதி இப்படம் வெளியாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில், ஸ்வஸ்திகா கலந்துகொள்ளவில்லை. இதனை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து பதிவிட்ட ஸ்வஸ்திகா முகர்ஜி, பாலியல் புகார் குறித்து மறுபடியும் பேசியுள்ளார். அந்தப் பதிவில், “பாலியல் துன்புறுத்தல் ஒரு நகைச்சுவை விஷயம் அல்ல. அதற்கு மன்னிப்பே இருக்கக் கூடாது. தயாரிப்பாளர்கள் எல்லாம் குளிர்ச்சியாகவும், கூலாகவும் இருப்பதாக நினைக்கலாம். ஆனால் உண்மையில் அப்படி இல்லை. அப்படி ஒருபோதும் இருக்காது” என தனது ஆதங்கத்தை குறிப்பிட்டுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here