விஜய் டிவியின் புதிய சீசனான “ரெடி ஸ்டெடி போ” எனும் நிகழ்ச்சி வரும் ஞாயிறு முதல் ஒளிப்பரப்பாகி நேயர்களை மகிழ்விக்க இருக்கிறது.

மனம் கவர்ந்த நிகழ்ச்சிகள்

புதிய நிகழ்ச்சிகளை தொடங்குவதன் மூலம் விஜய் டிவி, நேயர்களின் மனதில் நீங்கா இடம்பெற்று வருகிறது. இது பல தமிழ் சேனல்களில் இருந்து சற்று விலகி தனித்துவமான கதைகளையும், மற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. பிரைம் டைம் என்று சொல்லப்படும் மாலை மற்றும் இரவு நேரங்களில் ஒளிபரப்பப்படும் தொடர்கள் மற்றும் வார இறுதி நாட்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் முன்னணியில் இருந்து வருகிறது.

புதிய கேம் ஷோ

அதன் தொடர்ச்சியாக வரும் ஞாயிறு முதல் “ரெடி ஸ்டெடி போ” என்னும் புதிய கேம் ஷோ ஒளிபரப்பாக உள்ளது. இதுபற்றி விஜய் டிவி கூறியிருப்பதாவது; “”ரெடி ஸ்டெடி போ” எனும் பிரபல நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது, விஜய் டிவி புகழ் விஷால் (தமிழகத்தில் நம்பர் 1 சீரியலான பாக்யலட்சுமியில் எழில் கேரக்டரில் நடிக்கிறார்) மற்றும் கலக்கப்போவது யாரு / குக் வித் கோமாளி புகழ் ரக்ஷன். நிகழ்ச்சி வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கிற்கு குறைவில்லாமல் வழங்கப்படும் என்பது உறுதி.

சவாலான போட்டி

“ரெடி ஸ்டெடி போ” போட்டியாளர்கள் பொதுமக்கள்  மற்றும் விளம்பரத்துறையை சேர்ந்த மாடல்கள் ஆகியோர். இந்த நிகழ்ச்சி 3 வெவ்வேறு சுற்றுகளுடன் ஒன்றரை மணிநேரம் ஒளிபரப்பாகும். மேலும் ஒவ்வொரு சுற்றுக்கும் இரு அணியிலிருந்தும் ஒருவருடன் ஒருவர் போட்டியிடுவர். அதிகபட்ச புள்ளிகளுடன் வெற்றி பெறும் அணி மிகப்பெரிய பரிசுகளையும் வெல்லும். இதில் சுவாரஸ்யம் இங்கு தான் தொடங்கும். போட்டியில் தோல்வியடைந்த டீம் சவாலான பல்வேறு போட்டிகளை விளையாட வேண்டும். ஜூன் 11 அன்று ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் “ரெடி ஸ்டெடி போ”வின் அற்புதமான புதிய சீசனைப் காணத் தவறாதீர்கள்!” என்று கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here