தமிழகத்தில் அடுத்த வாரம் பள்ளிகள் திறக்கப்பட்ட உள்ள நிலையில் 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

பள்ளிகள் திறப்பு

தமிழகத்த்ல் வெளியின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இரருந்ததால், ஜூன் 1ஆம் திறக்கப்பட்ட வேண்டிய பள்ளிகள் திறப்பு ஜூன் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து அடுத்த வாரம் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சிறப்பு பேருந்துகள்

இதுதொடர்பாக போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வார இறுதி நாட்களில் சென்னைக்கு 900 பேருந்துகளும், மற்ற மாவட்டங்கள் மற்றும் பெங்களூருவுக்கு 1,300 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 2,200 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதேபோல், மதுரை மற்றும் திருச்சியிலிருந்து முன்பதிவு செய்யாத பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here