தனது மனைவி மகாலட்சுமி திட்டியதை அப்படியே சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் தயாரிப்பாளர் ரவீந்தர்.

காதல் திருமணம்

திரைப்பட தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகர், சீரியல் நடிகை மகாலக்ஷ்மியை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். மகாலக்ஷ்மிக்கு ஏற்கனவே திருமணம் நடந்து அவருக்கு ஒரு மகன் இருக்கிறார். முதல் கணவரை பிரிந்த மகாலக்ஷ்மி ரவீந்தரை இரண்டாவதாக மனது கொண்டார். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்ட நாள் முதல் சமூக வலைதளத்தில் பல ட்ரோல்களை சந்தித்து வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் அதிகம் பேசப்படும் ஜோடியாகவும் மாறி உள்ளனர். யார் என்ன சொன்னாலும் காதில் வாங்கிக் கொள்ளாத இந்த ஜோடி, தங்களது வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

ரொமான்டிக் பதிவு

ரவீந்தர் மற்றும் மகாலக்ஷ்மி அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் தனது வாழ்க்கையில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களையும் பதிவிட்டு வருவார்கள். சமீபத்தில் ரவீந்தர் தனியாக நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதை பார்த்த நெட்டிசன்ஸ் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இருவரும் பிரியப்போதாகவும் வதந்திகளை பரப்பி வந்தனர். இதனை பார்த்த மகாலட்சுமி இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு ரொமான்டிக்காக தன் காதலை வெளிப்படுத்தி இருந்தார்.

பதில் சொன்ன மகா

இதனால், அப்செட்டான மகாலஷ்மி தனது கணவரை திட்டிய வார்த்தைகளை அப்படியே எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் தயாரிப்பாளர் ரவீந்தர், அந்த பதிவில் இருப்பதாவது; “டேய் புருஷா.. எத்தனை தடவை உன்கிட்ட சொல்றது, தனியா எடுக்கிற போட்டோவை போடாதேன்னு, பாரு ஒட்டுமொத்த சோஷியல் மீடியாவும் நீயும் நானும் பிரிஞ்சிட்டோம்னு கதை கட்டி விடுறாங்க.. மவனே இனிமேல் தனியா இருக்குற போட்டோவை போட்டா அவ்வளவு தான்.. எனக்கு பிடிச்ச சேமியா உப்புமாவை 3 வேலைக்கும் செஞ்சி போட்டுடுவேன்” என மகாலட்சுமி திட்டியதை அப்படியே எடுத்துப் போட்டுவிட்டார் ரவீந்தர். மேலும், தன்னுடைய மைண்ட் வாய்ஸில்.. இன்னுமாடா நாங்க டிரெண்டு.. இதுக்கு இல்லையா ஒரு எண்டு” என அவர் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here