நடிகை மகாலட்சுமி தனது கணவர் ரவீந்தரை நினைத்து ரொமான்டிக் பதிவை வெளியிட்டுள்ளார்.

திருமண சர்ச்சை

திரைப்பட தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகர், சீரியல் நடிகை மகாலக்ஷ்மியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். மகாலக்ஷ்மிக்கு ஏற்கனவே திருமணம் நடந்து அவருக்கு ஒரு மகன் இருக்கிறார். முதல் கணவரை பிரிந்த மகாலக்ஷ்மி, ரவீந்தரை இரண்டாவதாக மனது கொண்டார். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்ட நாள் முதல் சமூக வலைதளத்தில் பல ட்ரோல்களை சந்தித்து வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் அதிகம் பேசப்படும் ஜோடியாகவும் மாறி உள்ளனர். யார் என்ன சொன்னாலும் காதில் வாங்கிக் கொள்ளாத இந்த ஜோடி, தங்களது வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். ரவீந்தர் மற்றும் மகாலக்ஷ்மி அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் தனது வாழ்க்கையில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களையும் பதிவிட்டு வருவார்கள். ஹனிமூனுக்கு சென்றது முதல் கோவிலுக்கு செல்வது வரை அனைத்தையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் இவர்களுக்கு பல வகையான கமெண்ட்டுகளும் குவிந்து வருகிறது.

ரொமான்டிக் பதிவு

சமீபத்தில் ரவீந்தர் தனியாக நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதை பார்த்த நெட்டிசன்ஸ் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இருவரும் பிரியப்போதாகவும் வதந்திகளை பரப்பி வந்தனர். இதனை பார்த்த மகாலட்சுமி இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு ரொமான்டிக்காக தன் காதலை கூறியுள்ளார். “என் மீது உன் கைகளை போடும்போது, இந்த உலகில் என்னால் முடியாதது எதுவுமில்லை என்று எனக்குத் தெரியப்படுத்துகிறாய்.. நான் உன்னை முழு மனதோடும் ஆன்மாவோடும் நேசிக்கிறேன் அம்மு” என அதில் குறிப்பிட்டுள்ளார். அதற்கு “லவ் யூ பொண்டாட்டி” என ரவீந்தர் கமெண்டில் தெரிவித்துள்ளார். இருவரும் பிரியப்போதாக வதந்தி பரப்பியவர்களுக்கு இந்த பதிவு மூலம் பதிலடி கொடுத்துள்ளார் நடிகை மகாலட்சுமி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here